காவலரை கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடிய பெண்.. குண்டு பாய்ந்து பரிதாப சாவு!

டெட்ராய்ட் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் அடைஷா மில்லர். இவர் தனது 25வது பிறந்த நாளையொட்டி ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது பலரும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினர். அப்போது அந்த நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கொடுக்க ஒரு போலீஸ் அதிகாரியும் வந்திருந்தார். டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மில்லர், அந்த அதிகாரியின் பின்னால் போய் பின்னாலிருந்து அவரைக் கட்டிப்பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அதிகாரி வைத்திருந்த துப்பாக்கியின் விசையில் கை பட்டு சுட்டு விட்டது.
துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த குண்டு, மில்லரின் நுரையீரலுக்குள் புகுந்து இதயத்தைத் துளைத்து விட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த மில்லரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications