கத்திப் பாடம் நடத்துவதால் ஆசிரியைகளுக்கு சீக்கிரமே குரல் கெட்டுப் போகும் அபாயம்!

இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள தேசிய குரல் மற்றும் பேச்சுக்கான மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களை விட ஆசிரியைகளுக்கே அதிக அளவில் குரல், தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
வீடுகளில் பேசுவதை விட பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகள் அதிக சப்தத்துடன் பேச வேண்டியுள்ளது. குறிப்பாக பாடம் நடத்தும்போது கத்திப் பாடம் நடத்துவது ஆசிரியைகள்தான். காரணம், மாணவர்களுக்குத் தெளிவாக புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களது குரல் சரியாக கேட்க வேண்டும் என்பதற்காகவும் அதிக சப்தம் போட்டு பாடம் நடத்துகிறார்கள் ஆசிரியைகள்.
ஆண் ஆசிரியர்களை விட 10 சதவீதம் அதிக அளவில் பெண் ஆசிரியைகள் சத்தம் போட்டு பாடம் நடத்துகிறார்களாம். அதேபோல வீட்டில் இருக்கும் போது பேசுவதை விட 7 சதவீதம் அதிக அளவில் சப்தம் போட்டுப் பேசுகிறார்களாம். மேலும், ஆண் ஆசிரியர்களை விட பெண்கள்தான் அதிக அளவில் உரக்கப் பாடம் நடத்துகிறார்களாம்.
இதன் காரணமாக ஆசிரியைகளுக்கு குரல் பாதிப்பு, குரல் கரடு முரடாக மாறுதல், குரல்வளையில் பாதிப்பு ஏற்படுவது உள்ளிட்டவை அதிகம் வருகிறதாம்.
பெண்களின் குரல் ஆண்களை விட சற்று மெல்லியதாக இருப்பதால் சத்தம் போட்டு பாடம் நடத்தினால்தான் வகுப்பறையில் அனைவருக்கும் தெளிவாக கேட்கும் என்று ஆசிரியைகள் கருதுகின்றனர். இதனால்தான் அவர்கள் மற்றவர்களை விட கத்தி பாடம் நடத்துகிறார்கள்.
ஆசிரியைகளுக்கு இதுபோன்ற தொண்டைப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க வகுப்பறைகளில் மைக் வைத்து அதன் மூலம் அவர்கள் பாடம் நடத்தினால் பெருமளவில் பிரச்சினையைக் குறைக்க முடியும் என்று இந்த மையம் கூறுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications