பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த்தின் வறுமை ஒழிப்புத் திட்டம்!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் எனது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடெங்கும் பல வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு எனது பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் மாதம் முழுவதும் 'மக்களுக்காக மக்கள் பணி' என்ற திட்டத்தை நிறைவேற்றும் வகையில் வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் முதல் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும் 32 நாட்கள் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த நாட்கள் கட்சியினர் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவார்கள்.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய கழகத்தின் சார்பில் சுமார் 10,000 இடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்- 4 தேர்வில் 12 லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டிய அவல நிலை இருக்கிறது என்பதை பார்க்கிறபோது நம் முன்னே எத்தகைய மகத்தான பணி காத்துக் கிடக்கிறது என்பதை எளிதில் உணரலாம்.
ஊழலையும், வறுமையையும் ஒழிப்பதே நமது முதல் வேலை. இந்த ஒரு மாதத்தில் மக்களிடையே அத்தகைய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த நாம் உணர்ச்சியோடும், ஊக்கத்தோடும் பாடுபடுவோம் என்ற உறுதியை ஏற்போம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications