சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா: ஒரு வாரம் முன்பே குவிந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா அடுத்த வாரம் நடப்பதையொட்டி நேற்று முதலே பக்தர்கள் குடில் அமைக்கும் பணியை துவங்கிவிட்டனர்.

பாபநாசம் கரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அடர்ந்த வனப்பகுதியில் இக்கோவில் இருப்பதால் விழாக்காலங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு திருவிழாவின்போது 520 தற்காலிக கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆடு அறுக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஏற்பாடுகள் இறுதி நேரத்தில் செய்யப்பட்டதால் பலன் குறைவாகவே இருந்தது. எனவே இந்த ஆண்டு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் 18ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை ஆடி அமாவாசை விழா நடக்கிறது. இதற்கான ஆயத்த கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் வருவாய், காவல், தீணையப்பு, சுகாதாரம் உள்ளிட்ட 16 அரசு துறை அலுவல்ர்கள் கலந்து கொண்டனர். அதில் எடுத்த முடிவுபடி 200 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 400 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆடு அறுக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது தவிர புதிதாக 10 நிரந்தர கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவிழாவுக்கு ஒரு வாரம் இருக்கையில் நேற்று முதலே பக்தர்கள் குடில் அமைக்கும் பணியைத் துவங்கிவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+