ஒரே நேரத்தில் 14 எஸ்.ஐ.க்கள் மாற்றம்: எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 14 எஸ்.ஐ.க்களை இடமாற்றம் செய்து எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் 14 எஸ்.ஐ.க்களை அதிரடியாக இடமாற்றம் செய்து எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு,
கங்கைகொண்டான் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அந்தோனி சவரிமுத்து நெல்லை தாலுகா காவல் நிலையத்துக்கும், செங்கோட்டை தமிழ்செல்வி நெல்லை தாலுகாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். தாழையூத்து எஸ்.ஐ. ராஜாமணி மானூருக்கும், மானூர் எஸ்.ஐ. விஜயகுமார் பழவூருக்கும், தாலுகா எஸ்.ஐ. முருகன் சீவலபேரிக்கும், தாலுகா எஸ்.ஐ. சுப்புலெட்சுமி மூன்றடைப்புக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று நில அபகரிப்பு தடுபபு பிரிவு எஸ்.ஐ. சங்கரன் மாவட்ட குற்றபிரிவுக்கும், முன்னீர்பள்ளம் பால்துரை மூக்கூடலுக்கும், மூன்றடைப்பு சுப்பிரமணியன் வளளியூருக்கும், கடையம் மீராள் பானு சேரன்மகாதேவிக்கும், சங்கரன்கோவில் நகரம் பழனி சுத்தமல்லிக்கும், சேரன்மகாதேவி சாகுல் ஹமீது முன்னீர்பள்ளத்துக்கும், சுத்தமல்லி ரமேஷ்கண்ணன் புளியங்குடிக்கும், அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. பிரவினா அம்பை காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications