ஜெர்மனியில் சிக்கிய சிலை கடத்தல் மன்னன் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிலைகளை திருடி கடத்திய சந்திர சுபாஷ் கபூர் இன்று அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழ்நாட்டின் அரியலூர் சுற்றுவட்டாரத்தில் 18க்கும் மேற்பட்ட சிலைகளைத் திருடி வெளிநாட்டுக் கடத்திய கடத்தல் கும்பலின் தலைவன் சுபாஷ் கபூர் ஜெர்மனி சிறையில் இருந்தான். அவனைப் பற்றி தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக போலீசார் டீம் ஒன்று ஜெர்மன் சென்றது. ஜெர்மன் போலீசார் சந்திர சுபாஷ் கபூரை தமிழக போலீசிடம் ஒப்படைக்க அவன் நேற்று நள்ளிரவு சென்னை கொண்டுவரப்பட்டான்.
பின்னர் அரியலூர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் மாஜிஸ்திரேட் முன்பு அவன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை 2 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வரும் 16-ந் தேதி மீண்டும் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளான்.












Click it and Unblock the Notifications