ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி மீன்பிடி படகில் தப்பிச் செல்ல முயன்ற 54 ஈழத் தமிழர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி மீன்பிடிபடகில் தப்பிச் செல்ல முயன்றதாக 54 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுடன் 13 சிங்களவர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இலங்கையின் வென்னப்புவ என்ற இடத்திலிருந்து 8 கடல் மைல் தொலைவில் ஈழத் தமிழர்களும் சிங்களவர்களும் இருந்த மீன்பிடிப் படகு ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் படகை இலங்கை கடற்படை வழிமறுத்தது. அவர்கள் அனைவரையும் கைது செய்து சிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது இலங்கைக்கு செல்ல முற்பட்டோரில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு, நீர்க்கொழும்பு, வென்னப்புவ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கையைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோர படகில் செல்ல முயற்சித்தோர் இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+