செங்கோட்டையனிடமிருந்து அமைச்சர், கட்சிப் பதவி பறிப்பு: ஜெயலலிதா அதிரடி

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்தார். அவரது ஆலோசனையின் பேரில் ஒரு அமைச்சரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒரு அமைச்சரை நியமிக்க கவர்னர் கே.ரோசய்யா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பணியாற்றியவர் கே.ஏ.செங்கோட்டையன். நேற்று மாலை இவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்குப் பதிலாக புதிய அமைச்சராக பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவி ஏற்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் 6-வது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
போட்டுக் கொடுத்தது மனைவி?
செங்கோட்டையனின் பதவி பறிப்புக்குக் காரணமாக சொல்லப்படுவது அவரது மனைவியும் மகனும்தான் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக அண்மையில் ஜெயலலிதாவை சந்தித்து இருவரும் புகார் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனை கூப்பிட்டு ஜெயலலிதா எச்சரித்தார் என்று கூறப்பட்டது. அதையும் மீறி செங்கோட்டையன் மீதான செயல்பாடு தொடர்ந்ததால் கல்தா கொடுக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் பதவியையும் மட்டுமின்றி செங்கோட்டையன் வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர் என்ற பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.
-
திட்டமிட்டபடி நாளை ஜூன் 4ம் தேதி தமிழக பள்ளிகள் திறக்கப்படும்.. செங்கோட்டையன் முக்கிய தகவல் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications