நைஜீரியாவில் தொடரும் சோகம்- பெட்ரோல் லாரிகள் எரிந்ததில் 30 பேர் கருகினர்
Subscribe to Oneindia Tamil
அபுஜா: நைஜீரியாவில் 5 பெட்ரோல் லாரிகள் தீப்பற்றி எரிந்ததில் 30 பேர் கருகி உயிரிழந்தனர்.
எண்ணெய்வளம் மிக்க நாடு நைஜீரியா. ஆனால் அந்த நாட்டு மக்களோ வறுமையில்தான் வாடி வருகின்றனர். நைஜீரியாவில் பெட்ரோல் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகளை பெட்ரோல் பிடிப்பதும் இதற்கான மோதலில் டேங்கர் லாரிகள் பற்றி எரிவதும் மக்கள் உயிரிழப்பதும் அடிக்கடி நிகழும் சம்பவங்களாகிவிட்டன.
கடந்த வாரம் இதேபோல் பெட்ரோல் லாரிகளில் இருந்து பெட்ரோல் பிடிக்க முயன்ற போது எதிர்பாரதவிதமாக பற்றிய தீயில் கருகி 200 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் ஹர்கோர்ட் துறைமுக நாகரம் அருகே 5 பெட்ரோல் லாரிகள் அடுத்தடுத்து தீ பிடித்ததில் 30 பேர் பரிதாபமாக கருகி உயிரிழந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications