மேற்குவங்கத்தில் தனித்து போட்டி- மமதாவின் சவாலை ஏற்பதாக காங்கிரஸ் அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்ற மமதா பானர்ஜியின் அறிவிப்பை ஏற்றுக் கொள்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று பேரணி ஒன்றில் பேசிய மமதா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். மேலும் மத்திய கூட்டணியில் மரியாதை இருக்கும் வரைதான் நீடிப்போம் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கூறுகையில், மம்தாவின் அறிவிப்பு பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவரது முடிவு அதுதான் என்றால், அதை ஏற்று தனித்துப் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்; அவரது சவாலை ஏற்கிறோம். ஆனால் கடந்த பேரவைத் தேர்தலில் எங்களுடன் கூட்டணிவைக்கவில்லை என்றால் மமதாவால் ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications