அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஆந்திர அமைச்சருக்கு பிடிவாரண்ட்
ஹைதராபாத்: அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் ஆந்திர மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே. பார்த்தசாரதிக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. பார்த்தசாரதி. அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த கேபிஆர் டெலி புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக இருந்தபோது அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக அமலாக்கப்பிரிவு அவர் மீது கடந்த 1999ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அவர் தனது நிறுவனத்திற்கு ரூ.60 லட்சத்திற்கு இயந்திரங்களை இறக்குமதி செய்தபோது வரி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டார் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்ட்டது. ஆனால் பார்த்தசாரதி அபராதத் தொகையை செலுத்தவில்லை. மேலும் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பொருளாதார குற்றங்களை விசாரி்ககும் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் மனுவை விசாரித்த நீதிமன்றம் அமைச்சர் பார்த்தசாரதிக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications