ஜாமீனுக்கு ரூ100 கோடி கேட்ட நீதிபதி: ஜனார்த்தன ரெட்டி உறவினர் ஒப்புதல் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

Janardhan Reddy and Pattabhirama Rao
ஹைதராபாத்: கர்நாடக முன்ன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை ஜாமீனில் விடுதலை செய்ய ரூ100 கோடி வரை நீதிபதி லட்சுமி ந்ரசிம்மராவ் பேரம் பேசியதாக ஜனார்த்தன ரெட்டியின் உறவினரான தசரத ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு நீதிபதிகள் ஜாமீன் கொடுத்தனர்.

இது தொடர்பாக 3 சிபிஐ நீதிபதிகள் சிக்கி சிறையில் உள்லனர். மேலும் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்தனர். லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜனார்த்தன ரெட்டியின் உறவினரான தசரத ரெட்டி அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவர் போலீசில் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் ஜாமீன் பெற்றுத்தர வேண்டும் என்று ஜனார்த்தன ரெட்டியை சிறையில் சந்தித்த போது கூறினார். இது தொடர்பாக நீதிபதி லட்சுமி நரசிம்மராவிடம் பேரம் பேசப்பட்டது. அவர் ஜாமீன் கொடுக்க ரூ100 கோடி கேட்டார். ஆனால் பல சுற்று பேரத்துக்குப் பிறகு ரூ15 கோடிக்கு இறங்கி வந்தார். ஆந்திராவில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் பணத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வங்கி மூலம் பணம் கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+