மும்பை தாக்குதல் நடந்த போது 60 மணி நேரம் தொடர்ச்சியாக விழித்திருந்தேன்: அபு ஜிண்டால் வாக்குமூலம்

சவூதி அரேபியாவில் பதுங்கியிருந்த அபுஜிண்டால் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர் .பின்னர் மும்பை பயங்கரவாத தடுப்பு போலீசிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான். மும்பை தாக்குதல் பற்றிய முழுவிவரங்களையும் மும்பை பயங்கரவாத தடுப்பு போலீசாரிடம் ஒப்புவித்திருக்கிறான் அபுஜிண்டால்.
இது தொடர்பாக மும்பை போலீஸ் உயர் அதிகாரி கெளசிக் கூறியதாவது:
2005-ம் ஆண்டு முதல் அபு ஜிண்டால் பயங்கரவாத பயிற்சிகளைப் பெறத் தொடங்கியிருக்கிறான். அஸ்லாம் காஷ்மீரி என்ற தீவிரவாதி மூலம் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் ஜிண்டால் தொடர்பில் இருந்து வந்திருக்கிறான். அஸ்லாம் காஷ்மீரியை ஜிண்டாலுக்கு அறிமுகப்படுத்தியது அவுரங்கபாத் ஆயுத குவியல் வழக்கில் தொடர்புடைய அமீர் சேக் என்பவன்.
2005-ம் ஆண்டு நேபாளம் சென்ற ஜிண்டால் அங்கு லஷ்கர் இ தொய்பா ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று அங்கு பயங்கரவாதிகள் முகாமில் இணைந்து கொண்டான். அனால் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹசீப்பை எளிதாக அணுகவும் முடிந்திருக்கிறது. அவனுக்கு இரண்டு முறை பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மும்பை தாக்குதலை முழுமையாக வழிநடத்தியது தாம்தான் என்று ஜிண்டால் கூறியிருக்கிறான். மேலும் தாக்குதல் நடந்த 60 மணி நேரமும் உறங்காமல் விழித்திருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறான். மேலும் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு ஹிந்து கற்றுக் கொடுத்ததுதம் தாம்தான் என்று ஜிண்டால் ஒப்புக் கொண்டிருக்கிறான்.
இதேபோல் மஹாராஷ்டிராவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள தீவிரவாதி ஜூல்பிகார் பையாஸின் மறைவிடம் பற்றியும் ஜிண்டால் கூறியிருக்கிறான் என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications