4 அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகளுக்கு அதிபர் விருது: ஒபாமா அறிவிப்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினியர்களுக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் அதிபர் விருதை வழங்கி கௌரவிக்கிறது. பிரசிடென்ட் ஏர்லி கெரியர் அவார்ட்ஸ் ஃபார் சயன்டிஸ்ட்ஸ் அன்ட் என்ஜினியர்ஸ்(பிஇசிஏஎஸ்இ) என்று அழைக்கப்படும் அந்த விருதை இந்த ஆண்டு பெறும் 96 ஆராய்ச்சியாளர்களின் பெயரை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட்டார்.
இந்த விருது பெறுபவர்களில் 4 அமெரிக்கா வாழ் இந்திய ஆராய்ச்சியாளர்களும் அடக்கம். மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வட் மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த பிஜு பாரேக்காடன், மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த பவன் சின்ஹா, பாரக் ஏ. பதக் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி வேதுல சர்மா ஆகிய 4 இந்திய அமெரி்க்கர்கள் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.
இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருது இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications