For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுலை பார்லி. கட்சித் தலைவராக்கினா மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்: காங்.எம்பிக்கள் கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

Rahul Gandhi
டெல்லி: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமித்துவிட்டால் மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கை வந்துவிடும் என்று ஜால்ரா எம்.பிக்கள் 10 பேர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்பு வகிக்க தாம் தயார் என்று அண்மையில் ராகுல்காந்தி கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு என்ன பதவி? என்ன அமைச்சர்? என்ர ஆரூடங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பிக்கள் 10 பேர் ஒன்றாக சேர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், நாடாளுமன்ற மக்களவை கட்சித் தலைவர் பதவியை ராகுலுக்கு வழங்க வேண்டும். நம் முன் உள்ள சவால்களை முறியடித்துவிடுவார்.. நாட்டின் 50 விழுக்காடு மக்கள் துடிப்பான தலைவரையே எதிர்பார்க்கின்றனர். நிச்சயம் ராகுலை அந்தப் பதவியில் நியமித்தால் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

English summary
Pushing for Rahul Gandhi's active role in Parliament, 10 Congress MPs have written to party chief Sonia Gandhi suggesting his appointment as the Leader of the Lok Sabha, saying it was the "need of the hour" to create a "sense of confidence" among the countrymen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X