கும்பகோணத்தில் வழிப்பறி முயற்சி: பாமக மாநில இலக்கிய அணி செயலாளர் முருகன் கைது
கும்பகோணம்: கும்பகோணத்தில் வழிப்பறி செய்ய முயன்ற பாமக மாநில இலக்கிய அணி செயலாளர் முருகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைபாஸ் ரோட்டில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.ஐ. கரிகால்சோழன் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மறைவிடத்தில் 4 பேர் ஆயுதங்களுடன் நின்றபடி அவ்வழியே வருபவர்களிடம் வழிப்பறிச் செய்ய முயன்றது தெரிய வந்தது. இதைப் பார்த்த போலீசார் அந்த 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மணஞ்சேரியைச் சேர்ந்த முருகன்(35), சுதாகர்(32), விவேக்(24), வேதனாஞ்சேரியை சேர்ந்த பிரசன்னா(24) என்பது தெரிய வந்தது.
இதில் முருகன் பாமக மாநில இலக்கிய அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications