இலங்கை ராணுவத்தினருக்கு எதிராக பெங்களூரில் போராட்டம்-ஸ்ரீராம் சேனா அறிவிப்பு
இதுகுறித்து, இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்க கூடாது. அங்கு 40 லட்சம் தமிழர்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல், அடிமைகள் போல வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்திற்கு பெங்களூரில் பயிற்சி தருவது சரியான முடிவல்லை. இந்த பயிற்சி என்பது ஒரு திட்டமிட்ட சதியாகும். இந்த பயிற்சியை எப்படி இந்திய அரசு தரலாம். இது நியாயமற்ற செயல்.
இலங்கையில் தமிழர்கள் மூன்றாம் தர மக்களைப் போல நடத்தப்படுகிறார்கள். இதுவரை அங்கு ஏழரை லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இந்தச் சூழ்நிலையில் இலங்கை ராணுவத்தினருக்கு பெங்களூரில் பயிற்சி தருவதை எதிர்த்து எலஹங்கா விமானப்படை நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும். அது உறுதி, 100 சதவீதம் உறுதி. போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார் முத்தலிக்.