தொல்லை தரும் டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களுக்கு முடிவு கட்டுகிறது டிராய்
பதிவுசெய்யாத டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் தொடர்ந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை செய்வதாக புகார் வந்தால் ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும். இப்படியே 10 முறை அபராதம் விதிக்கப்பட்டால் அந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் செல்போன் சேவை முற்றிலுமாக துண்டிக்கபட்டுவிடும் என்று டிராய் பரிந்துரைத்துள்ளது.
அதேபோல் உங்களுக்கு வரும் தேவையில்லாத எஸ்.எம்.எஸ். பற்றிய தகவல்களை 1909 என்ற எண்ணுக்கு பார்வார்டு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இணையதளம் வழியாக மின்னஞ்சல் மூலமாக புகார் செய்தாலும் இத்தகைய எஸ்.எம்.எஸ். அனுப்பும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்மைக்காலமாக ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்ஸிஸ் ஆகியவை பல்க் எஸ்.எம்.எஸ். சேவை மூலம் ஏராளமான எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகின்றனர். இத்தகைய டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் 10 இலக்க எண்களையே பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.