தூத்துக்குடி அனல் மின் நிலைய 3வது யூனிட்டில் உற்பத்தி தொடக்கம்: மக்கள் நிம்மதி பெருமூச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட் பாய்லரில் ஏற்பட்ட பழுது நேற்று இரவோடு இரவாக சரி செய்யப்பட்டதால் மீண்டும் இன்று காலை உற்பத்தி தொடங்கியுளளது. இதனால் மீ்ன் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் நீங்கியது.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய மின் உற்பத்தி கேந்திரமாக விளங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 5 யூனிட்களில் இருந்து 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் இந்த அனல்மின் நிலையத்தில் 2 முறை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. தீ விபத்தால் ஏற்பட்ட பழுது துரித கதியில் சரி செய்யப்பட்டதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்களும் இயங்கி வந்த நிலையில் கடந்த 6ம் தேதியன்று பராமரிப்பு காரணமாக 2வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் நாள் ஒன்றுக்கு 210 யூனிட் மி்ன் உற்பத்தி குறைந்தது. வரும் 26ம் தேதி வரை இந்த யூனிட்டில் பராமரிப்பு பணி நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 5,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் 3வது யூனிட்டில் உள்ள ராட்சத பாய்லரில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி முடங்கியது.
இதனால் மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்தது. இதனால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே அதிகாரிகள் மேற்பார்வையில் பாய்லரை பழுது பார்க்கும் பணி இரவு பகலாக நடந்தது. இன்று காலை பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இதனால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் நீங்கியது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications