தூத்துக்குடி அனல் மின் நிலைய 3வது யூனிட்டில் உற்பத்தி தொடக்கம்: மக்கள் நிம்மதி பெருமூச்சு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட் பாய்லரில் ஏற்பட்ட பழுது நேற்று இரவோடு இரவாக சரி செய்யப்பட்டதால் மீண்டும் இன்று காலை உற்பத்தி தொடங்கியுளளது. இதனால் மீ்ன் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் நீங்கியது.

தூத்துக்குடி அனல் மின் நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய மின் உற்பத்தி கேந்திரமாக விளங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 5 யூனிட்களில் இருந்து 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் இந்த அனல்மின் நிலையத்தில் 2 முறை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. தீ விபத்தால் ஏற்பட்ட பழுது துரித கதியில் சரி செய்யப்பட்டதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்களும் இயங்கி வந்த நிலையில் கடந்த 6ம் தேதியன்று பராமரிப்பு காரணமாக 2வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் நாள் ஒன்றுக்கு 210 யூனிட் மி்ன் உற்பத்தி குறைந்தது. வரும் 26ம் தேதி வரை இந்த யூனிட்டில் பராமரிப்பு பணி நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 5,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் 3வது யூனிட்டில் உள்ள ராட்சத பாய்லரில் பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி முடங்கியது.

இதனால் மேலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்தது. இதனால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே அதிகாரிகள் மேற்பார்வையில் பாய்லரை பழுது பார்க்கும் பணி இரவு பகலாக நடந்தது. இன்று காலை பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இதனால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் நீங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+