நில அபகரிப்பு: கூடுதல் டிஜிபி துக்கையாண்டியின் தம்பி வீட்டில் போலீஸ் ரெய்ட்!

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தலைமை விழிப்புப் பணி அலுவலராக இருந்த ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டியின் மனைவி மற்றும் மகள் மீதான நில அபகரிப்பு புகாரால் ஓய்வு பெறும் நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சென்னையை விட்டு வெளியேறவும் துக்கையாண்டிக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் மகள்கள் இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளனர்.
இந்நிலையில் நீலாங்கரைஅருகே உள்ள பனையூர் " சீ ஷோர் டவுனில்" துக்கையாண்டி வீடு உள்ளது. போலீசார் அங்கு சென்ற போது, வீடு பூட்டிக்கிடந்தது. இதனால் அங்கு சோதனை நடத்த முடியாமல் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
துக்கையாண்டியின் தம்பி நாராயணசாமி பக்கத்து தெருவில் வசிக்கிறார். அவரது வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அங்கு நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். நாராயணசாமி சென்னை ஆயுதப்படை போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.
அவரது மனைவி பாலசரஸ்வதி, துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியின் தங்கை ஆவார். சோதனை போட்டபோது, நாராயணசாமியும், பாலசரஸ்வதியும் வீட்டில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
புகார் என்ன?
மும்பை துறைமுகம் தலாய் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமாருக்கு சொந்தமான சென்னை பனையூரில் 12 ஆயிரம் சதுர அடி நிலத்தை மோசடியாக அபகரித்தது, மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால், அவரது மனைவி ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தது, தில்லியைச் சேர்ந்த சீமா சந்தீப்புக்குச் சொந்தமாக பனையூரில் இருந்த 2 கிரவுண்ட் நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றது ஆகியவை துக்கையாண்டி மனைவி மற்றும் மகள்கள் மீதான புகாராகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications