திருவண்ணாமலையில் வனப்பாதையில் கிரிவலம் செல்ல தடை: பக்தர்கள் எரிச்சல்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்வது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பௌர்ணமி நாள் அன்றும், மற்ற விஷேச காலங்களிலும் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப் பாதையில் கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் மலை அருகில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள ஒற்றையடிப் பாதையான உள்வட்ட பாதை வழியாகவும் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் உள்வட்ட பாதை வழியாக பக்தர்கள் கிரிவலம் செல்லவும், காப்புக்காடு பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் நாகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருவண்ணாமலை மலையை சுயம்பு வடிவாக சிவனைப் பக்தர்கள் வழிபடுகின்றனர். மலையின் புனிதத்தையும், வளத்தையும், பசுமையையும் பாதுகாப்பது வனத்துறையின் கடமை. மனிதர்களால் மலைக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது, மலையின் இயற்கை சூழலை பாதுகாப்பது தான் உண்மையான ஆன்மீகம் ஆகும்.
எனவே உள்வட்ட பாதை வழியாகக் கிரிவலம் செல்வதற்கும், காப்புக்காடு பகுதிக்குள் ஆட்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிவலப்பாதையில் 50 இடங்களில் தடை செய்யப்பட்ட காப்புக்காடு பகுதி உள்ளது. காப்புக்காடு பகுதிக்குள் நுழைவது சட்டப்படி குற்றமாகும். இது குறித்த வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை பலகைகள் விரைவில் வைக்கப்படும். தடையை மீறி உள்வட்ட கிரிவலப் பாதையிலும், காப்புக்காடு பகுதியிலும் கிரிவலம் செல்வோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
வனத்துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடேய பெரும் கோபத்தையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications