தோழிகளுடன் அரட்டை: வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பள்ளி மாணவி தீக்குளித்து சாவு
தூத்துக்குடி: பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு வராமல் தோழிகளுடன் அரட்டை அடித்ததால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தொண்டைமான் தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி கனகலெட்சுமி. அவர் அங்குள்ள பீடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள். இதில் மூத்த மகள் சந்தோஷினி அதே ஊரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
சந்தோஷினி பள்ளி முடிந்ததும் நேராக வீட்டுக்கு வராமல் தனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பார். இதனால் வீட்டிற்கு அடிக்கடி தாமதமாக வந்துள்ளார். இது பிடிக்காத கனகலெட்சுமி அவரைக் கண்டித்துள்ளார். இருப்பினும் சந்தோஷினி தனது தோழிகளுடன் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த கனகலெட்சுமி மகளை பள்ளி்க்கு அனுப்புவதை நிறுத்தினார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி முத்துகிருஷ்ணன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மற்ற குழந்தைகள் பள்ளி்க்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு சந்தோஷினியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு கனகலெட்சுமி பீடி கம்பெனி்க்கு சென்றுவிட்டார். காலை 11 மணி அளவில் அவர்கள் வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த பக்கத்து வீட்டிலிருந்த எஸ்தர் என்பவர் பீடி கம்பெனிக்கு சென்று கனகலெட்சுமியிடம் விபரத்தை தெரிவித்தார். உடனே அவர் பதறி அடித்து கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தார். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சந்தோஷினி உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை தூத்துக்கடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தாய் தன்னை வீட்டிற்குள் சிறை வைத்ததால் மனமுடைந்த சந்தோஷினி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தது தெரிய வந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications