கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதிப்பதா? வைகோ, சீமான் கண்டனம்

வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை ஆகும்.
கூடங்குளம் அணுஉலை குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நடக்கும் வழக்குகளில், ஜப்பான் புகுஷிமா விபத்திற்கு பிந்தைய (இந்திய அணு உலைகள் பாதுகாப்பு குறித்த) வல்லுநர் குழு பரிந்துரைகளை அமல்படுத்திய பிறகே, கூடங்குளம் அணு உலை செயல்படுத்தப்படும் என்று அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பரிந்துரைகள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் எரிபொருள் நிரப்ப ஆணையம் அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சிக்குரியது..
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்துகள் ஏற்பட்டால் அதை எதிர் கொள்வதற்காக பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள் முறையாக வகுக்கப்படவில்லை என்றும், பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தாத நிலையில் கூடங்குளம் அணு உலையைத் திறக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கும் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்பலாம் என்ற அனுமதியானது நீதிமன்றத்தின் மாண்பையும் - நடைமுறைகளையும் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல் நீதியியலின் சாராம்சமான 'வருமுன் காப்போம்' என்ற முக்கியக் கோட்பாட்டை முற்றிலுமாக புறந்தள்ளி விட்டு, கூடங்குளத்தில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பலாம் என்ற அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். அணு ஆற்றல் ஒழுங்கு முறை ஆணையம் அளித்த இந்த சர்ச்சைக்குரிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:
கூடங்குளம் அணு உலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதில் சட்டப்படியான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டு, அதன் மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை காத்திருந்து செயல்பட வேண்டிய அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம், தன்னிச்சையாக முடிவு செய்து எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்துள்ளது நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கும் செயல் அல்ல. தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு, முறையற்ற வழியில் அணு உலையை செயல்பட வைக்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications