பாக். நடுவர் என்னை 'அதுக்கு' பயன்படுத்தினார்... மாடல் போடும் குண்டு!
மும்பை, ஓஷிவாரா பகுதியைச் சேர்ந்த மாடல் அழகியான லீனா கபூர்தான் இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல மாதங்களுக்கு தன்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார் லீனா.
இதுதொடர்பாக ஆசாத் ராப் மீது மும்பை போலீஸிலும் புகார் கொடுத்துள்ளார் லீனா. அதில் அவர் கூறியிருப்பதாவது...
நான் 6 மாதங்களுக்கு முன்பு இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆசாத்தை சந்தித்தேன். அப்போது எங்களது தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டோம். பிறகு இலங்கையில் 3 நாட்கள் நாங்கள் சேர்ந்திருந்தோம்.
மும்பைக்கு திரும்பியவுடன் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து என்னைப் பார்க்க மும்பைக்கு வந்தார் ஆசாத். அதன் பிறகு எங்களது உறவு வலுப்பட்டது. என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார் ஆசாத். எனக்காக ஒரு பிளாட்டும் வாங்கிக் கொடுத்தார். தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் தனது மதம் ஒருவருக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்துக் கொள்ள அனுமதி தருவதாக கூறினார்.
தொடர்ந்து நானும் அவரும் சந்தித்து சந்தோஷமாக இருந்தோம். ஆனால் நாளடைவில் திருமணப் பேச்சை அவர் மறக்கத் தொடங்கினார். நான் பலமுறை கேட்டும் அவர் சரியாக பதில் தரவில்லை.
சில நாட்களுக்கு முன்பு நான் அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் பதில் பேசவில்லை. பேச மறுத்து விட்டார். அவரே ஓரிரு நாட்களுக்கு முன்பு என்னைத் தொடர்பு கொண்டு நீ யார் என்றே எனக்குத் தெரியாது. இனிமேல் என்னுடன் பேசாதே என்று கூறி விட்டார் என்று கூறியுள்ளார் லீனா.