யூரோ மில்லியன் லாட்டரியில் ரூ.1,277 கோடி வென்ற இங்கிலாந்து தம்பதி

கடந்த 2004ம் ஆண்டு முதல் யூரோ மில்லியன் லாட்டரி குலுக்கல் ஐரோப்பா கண்டத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்தின் நேஷனல் லாட்டரி நிறுவனம் நடத்தும் இந்த குலுக்கலுக்கான டிக்கெட்டுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, லக்சம்பர்க், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளில் விற்பகப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான லாட்டரி குலுக்கல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதில் இங்கிலாந்தில் உள்ள சஃப்போக்கைச் சேர்ந்த தம்பதி ஏட்ரியன் பேபோர்டு(41) மற்றும் கில்லியன்(40) ஆகியோருககு ரூ.1,277 கோடி பரிசு விழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹெர்ட்போர்ட்ஷையரில் உள்ள டவுன் ஹால் கன்ட்ரி ஹவுஸ் ஹோட்டலில் நடந்த விழாவில் அவர்கள் தான் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
ஹேவர்ஹில்லில் பார்ட்னர்ஷிப் முறையில் மியூசிக் கடை வைத்துள்ளார் ஏட்ரியன். கில்லியன் கேம்ப்ரிட்ஜில் உள்ள ஆட்டன்ப்ரூக்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் சுகாதார உதவியாளராக உள்ளார். தற்போது லாட்டரி பணத்தை வைத்து என்ன செய்வது என்று அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். சகல வசதிகளுடன் கூடிய வீட்டை வாங்க முடிவு செய்துள்ளனர். மேலும் கில்லியன் தனது கனவு காரான ஆடி க்யூ7 ஒன்றை வாங்கவிருக்கிறார்.












Click it and Unblock the Notifications