கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்குகளில் வரும் 29ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அந்த மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கபப்ட்டிருந்தது. இந்நிலையில் வடபழனியைச் சேர்ந்த பொறியாளர் ஜி. சுந்தரராஜன், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கான தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்ததை எதிர்த்து ஒரு மனுத்தாக்கல் செய்தார். இம்மனுக்கள் மீது நீதிபதிகள் பி.ஜோதிமணி, பி. தேவதாஸ் முன்னிலையில் கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் திருத்தப்பட்ட அனுமதி உத்தரவை வழக்கறிஞர் ரீட்டா சந்திரசேகரும், அணு மின்நிலையத்தின் பாதுகாப்புக்கான பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய மனுவை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் வழக்கறிஞர் சுரேஷ்குமாரும் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது இருதரப்பு விவாதம் நடைபெற்றது. பின்னர், கூடங்குளம் வழாக்குகளில் வரும் 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது என்று நீதிபதி பி. ஜோதிமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications