ஒரே ஆண்டில் 3வது 'பிளாக்'குக்கு மாறிய அன்னா!

ஊழலுக்கு எதிராகப் போராடி வந்த அன்னா குழுவை ஹசாரே அண்மையில் கலைத்தார். அவர்கள் தற்போது அரசியலில் குதிக்கவிருக்கின்றனர்.
இந்நிலையில் தனது கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் இணையதளத்தில் ஹசாரே annahazarethinks.blogspot.in என்ற புதிய பிளாக் ஒன்றை நேற்று துவங்கியுள்ளார். இது ஒரே ஆண்டில் அன்னா தொடங்கியுள்ள 3வது பிளாக் ஆகும்.
முதலில் அன்னாஹசாரேசேஸ்(annahazaresays) என்ற பிளாக்கை பத்திரிக்கையாளர் ராஜு பருலேகர் மூலம் கவனித்து வந்தார் அன்னா. ஆனால் திடீரென பருலேகருக்கும், அன்னாவுக்கும் முட்டிக் கொண்டது. இதையடுத்து அந்த பிளாக்கில் எழுதுவதை நிறுத்தினார் அன்னா.
அதன் பிறகு ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் பிளாக்கில் எழுதி வந்தார். தற்போது அதிலிருந்தும் விலகி, புதிய பிளாக்கை துவங்கியுள்ளார் ஹசாரே. அதன் பெயர் annahazarethinks.blogspot.in. அவர் தனது கருத்துக்களை எந்தவித இடையூறுமின்றி, சுதந்திரமாக தெரிவிக்க இந்த புதிய பிளாக் உதவும் என்று கூறப்படுகிறது.
நிலக்கரி ஊழலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பங்கு உள்ளதாக அவர் நேற்றிரவு தனது பிளாக்கில் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications