அசாமில் தொடரும் வன்முறைகளால் பதற்றம் நீட்டிப்பு - மாநிலம் தழுவிய பந்த்தால் இயல்புவாழ்க்கை பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் கோக்ராஜர் மாவட்டத்தில் தொடரும் வன்முறைகளால் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர் அமைப்பினர் இன்று நடத்திய மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அடையாளம் தெரியாத நபர்கள் அசாமின் செளகதி, பகிரகிராம் ஆகிய இடங்களில் நேற்று இரவு கையெறிகுண்டுகளை வீசி எறிந்ததுடன் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து பதற்றமான மாவட்டங்களில் ராணுவத்தினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே போடோலாந்து கவுன்சிலை ரத்து செய்யக் கோரியும் அதன் தலைவர் ஹக்ரம மொகிலரியை கைது செய்ய வலியுறுத்தியும் அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர் அமைப்பினர் இன்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையான என்.ஹெச்.-31-ல் வாகனங்களை வழிமறித்தோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதேபோல் துப்ரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பந்த் ஆதரவாளர்கள் மீதும் துபாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+