சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தொடர்ந்து அளிப்போம்: மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜூ

இலங்கையில் ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள ராணுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மூலையிலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த குரல்.
தமிழகத்தில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போதும்கூட உதகையில் பயிற்சி கொடுக்கப்பட்டு வரும் 2 சிங்கள அதிகாரிகளை வெளியேற்றக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக எதிர்ப்பு குறித்து பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ கூறியுள்ளதாவது:
இலங்கை நமது நட்பு நாடு. அதனால் அதன் ராணுவ வீரர்களுக்கு நமது ராணுவ நிலையங்களில் தொடர்ந்து பயிற்சி அளிப்போம். இதற்கு மாநில அரசுகளிடம் இருந்து சில நேரங்களில் ஆட்சேபனை எழலாம். அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications