For Daily Alerts
Just In
பெரம்பலூர் அருகே சாலை விபத்து: கவுன்சிலர் உட்பட 5 பேர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 5 பேர் பலியாகினர்.
பெரம்பலூர் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது திருச்சி நோக்கிச் சென்ற பேருந்து மோதியதில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் அமுதா, அவரது மகன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பெரம்பலூர்- ஆலத்தூர் அருகே இச்சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
Five persons were killed on the spot near Perambalur.
Story first published: Tuesday, August 28, 2012, 9:40 [IST]