நெல்லை மக்களுக்கு ஓர் கெட்ட செய்தி: மின்தடை நேரம் அதிகரிக்கும்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட்டில் திடீர் என்று பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனி்ட்கள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 1வது யூனிட் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 19ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தண்ணீர் தட்டுர்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக 2 யூனிட்கள் இயங்காமல் இருந்தன. இதனால் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிகறது.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் 3வது யூனிட்டின் முக்கிய பகுதியான ஐடி பேன் திடீரென பழுதானது. இரண்டு பேன்கள் உள்ள இந்த பகுதியில் 1 பேன் பழுதானதால் மி்ன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வெறும் 80 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய உத்தரவிட்டதை அடுத்து 3வது யூனிட்டில் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதை சரி செய்ய 3 நாட்கள் ஆகும் என தெரிகிறது. இதனால் மீதமுள்ள 3 யூனிட்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. எனவே நெல்லை மாவட்டத்தில் மின்தடைநேரம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.