மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 2 மகன்களை ஆற்றில் வீசிக் கொன்ற வாலிபர்
மேட்டூர்: மனைவியின் நடத்தையை சந்தேகித்து தன்னுடைய 2 மகன்களை ஆற்றில் வீசிக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி செந்தில். அவரது மனைவி சங்கீதா. அவர்களுடைய மகன்கள் வேல்முருகன்(8), கீர்த்திவாசன்(6).
செந்திலுக்கு தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளது. இதனால் அவர் தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையி்ல் செந்தில் தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டு மேட்டூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
ஆற்றை அடைந்த அவர் 2 மகன்களையும் தூக்கி நீரில் வீசினார். 2 சிறுவர்களும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மகன்களை வீசிய கையோடு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் மனதை மாற்றிக் கொண்ட அவர் நீந்தி கரையை அடைந்தார். பின்னர் தனது மகன்களையும் தேடியுள்ளார்.
ஆனால் அவர்கள் கிடைக்காததால் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் நேற்று மாலை ஆற்றுக்கு சென்று சிறுவர்களைத் தேடினர். இன்று காலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து செந்திலை போலீசார் கைது செய்தனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications