தூக்குத் தண்டனையை நிறைவேற்ற என்னென்ன பார்மாலிட்டிகள்?
மும்பை: ஒருவருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏகப்பட்ட பார்மாலிட்டிகளை வைத்துள்ளனர். அதையெல்லாம் நிறைவேற்றிய பின்னர்தான் கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டுவார்களாம்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள எரவாடா சிறையில் 1995ம் ஆண்டு சுதாகர் ஜோஷி என்பவர் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் ஒரு தூக்குத் தண்டனையைப் பார்க்கத் தயாராகி வருகிறது மகாராஷ்டிரா. அதற்கு முன்பு சில சட்டரீதியான பார்மாலிட்டிகளை முடிக்க வேண்டுமாம். அந்த பார்மாலிட்டிகளைப் பார்க்கலாமா...
- முதலில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக கசாப்பிடம் சிறை கண்காணிப்பாளர் சொல்ல வேண்டும். அதன் பின்னர் கருணை மனு தாக்கல் செய்ய விரும்பினால் 7 நாட்களுக்குள் அதைச்செய்யுமாறும் தண்டனைக் கைதியிடம் சொல்லப்பட வேண்டும்.
- அதன் பின்னர் மகாராஷ்டிர மாநில ஆளுநரிடம் கருணை மனுவைச் சமர்ப்பிக்கலாம். அவருக்கு அடுத்து குடியரசுத் தலைவரிடம் கருணை மனு செல்லும்.
- கருணை மனு நிராகரிக்கப்பட்டால், தண்டனைக்கான தேதி குறிக்கப்படும்.
- தூக்குத் தண்டனையை நிறைவேற்றும்போது அதை மேற்கொள்ளும் ஊழியர்களுக்குத் தனியாக ஊதியம் எதுவும் தரப்பட மாட்டாது.












Click it and Unblock the Notifications