நாடாளுமன்றத்தை செயல்படவிடமாட்டோம்: பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவிப்பு
சென்னை: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் இல்லையேல் அரசைக் கவிழ்த்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும் என்று பாஜக திட்டவிட்டமாக அறிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்தாக வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தை கலைத்துவிட்டு மக்களை தேர்தலில் சந்திக்கட்டும் .இரண்டில் ஒன்று நடக்கும் வரை நிச்சயமாக நாடாளுமன்றத்தை முடக்குவோம்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் மட்டும்தானா? ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் போன்ற பல்வேறு புகார்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆளாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க அச்சப்படுகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications