கடாபி மகனுக்கு இரக்கம் காட்டக் கூடாதா?... டோனி பிளேருக்கு காதலி கோரிக்கை!

இவர்தான் சைப் கடாபியின் கடைசிக் காதலி ஆவார். இவர் இஸ்ரேலைச் சேர்ந்த மாடல் அழகி ஆவார். தற்போது லிபியாவில் புரட்சிப் படையினர் வசம் சிக்கி கைதியாக உள்ளார் சைப் கடாபி. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு லிபியாவில் ஏற்பட்ட பெரும் புரட்சியின்போது கடாபியைப் பிடித்துக் கொலை செய்தனர் புரட்சிப் படையினர். அதன் பின்னர் சைபைப் பிடித்தனர். இருப்பினும் இதுவரை அவருக்கு தண்டனை கொடுக்காமல் கைதியாக வைத்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
சைப் அல் இஸ்லாம் கடாபி என்று அழைக்கப்படும் சைபுக்கு நிறையக் காதலிகள் இருந்தனர். அவர்களில் கடைசிக் காதலி என்று அழைக்கப்படுபவர்தான் இந்த ஆர்லி. சைப் கடாபிக்கும், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இதனால்தான் சைபின் உயிரைக் காப்பாற்ற டோனி பிளேர் உதவ வேண்டும் என்று அவருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் ஆர்லி.
சைப் விவகாரத்தில் நியாயமாக நடக்காது லிபியா என்ற கருத்தை பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் முன் வைத்து வருகின்றனர். அவரது வழக்கை தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இதுவரை பலன்இல்லை.
இந்த நிலையில்தான் சைபின் 41 வயது முன்னாள் காதலியான ஆர்லி, டோனி பிளேருக்குக் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டோனி பிளேருடன் மிக நெருக்கமாக பழகி வந்தவர் சைப். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். எனவே தனது நண்பரைக் காக்க டோணி பிளேர் முன்வர வேண்டும். இது அவருக்கான நேரம். கடவுள் மீ்து நம்பிக்கை கொண்டவர் பிளேர். ஒரு நல்ல கிறிஸ்தவராக அவர் கஷ்டப்படும் தனது நண்பருக்கு உதவ முன்வர வேண்டும் என்றார் ஆர்லி.
சைப் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் 2007ம் ஆண்டு பிஎச்டி ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு நிறைய அறிவுரைகளை வழங்கி கடிதம் எழுதியுள்ளார் பிளேர். அந்தக் கடிதத்தையும் ஆர்லி காட்டினார்.
ஆர்லியின் இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை பிளேர் தரப்பில் கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications