நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக 5 நிறுவனங்கள் மீது சிபிஐவழக்கு- 30 இடங்களில் அதிரடி சோதனை

Subscribe to Oneindia Tamil

Coal Mining
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக 5 நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் டெல்லி உட்பட 10 நகரங்களில் 30 இடங்களில் சுரங்க முறைகேடு தொடர்பாக அதிரடி சோதனையையும் சிபிஐ நடத்தியுள்ளது.

நாட்டை உலுக்கியிருக்கும் நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் சிபிஐயும் தனது பங்குக்கு சாட்டையை சுழற்றத் தொடங்கியிருக்கிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக 5 நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சுரங்க முறைகேடு தொடர்பாக 10 நகரங்களில் மொத்தம் 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா, ஹைதராபாத், தன்பாத், நாக்பூர் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

மேலும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கர்நாடக மாநிலங்களில் நிலக்கரி சுரங்கத்தைப் பெற்றுக் கொண்டு வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்த நிறுவனங்கள் தொடர்பாகவும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது .

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த 3 மாதங்களுக்கு முன்பே ஊழல் தடுப்பு கண்காணிப்பகம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த காலக்கெடு கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதனால் கூடுதல் கால அவகாசம் கோரியிருந்த சிபிஐ இப்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இனி எத்தனை தலைகள் உருளுமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+