காதலி, கணவர் உள்பட 5 பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டுக் கொண்டு இறந்த வாலிபர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காதலி வேறு ஒருவரை மணந்ததால் கடுப்பான காதலன் காதலி உள்பட 5 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லியில் உள்ள விஸ்வாஷ் நகரைச் சேர்நதவர் ரவி(25). அவர் ரேணு என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் ரேணுவை நவீன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு ரேணு தனது கணவருடன் தென்கிழக்கு டெல்லியில் உள்ள பிந்தாபூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் ரவி ரேணுவுடன் தொடர்பு வைத்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து கொடுக்காமல் வேறு ஒருவருக்கு ரேணுவை மணம்முடித்து வைத்துவிட்டார்களே என்று ரவிக்கு திடீர் ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று பிந்தாபூருக்கு சென்று தனது காதலி, அவரது கணவர் நவின் ஆகியோரை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு ஓடி வந்த வீட்டு உரிமையாளர் ஷீலாவையும் அவர் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவர் வெளியே சென்றபோது அவரது கைகளில் 2 துப்பாக்கிள் இருந்ததாக ஷீலாவின் மகன் தினேஷ் தெரிவித்தார். அருகில் வந்தால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று தினேஷை மிரட்டிவிட்டு ரவி காரில் தப்பிச் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத் சென்ற ரவி அங்கு ரேணுவின் தந்தை ஹரேந்தர் மற்றும் சகோதரி பேபி ஆகியோரை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

இந்த சம்பவத்தால் டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+