மும்பையை முடக்கிப் போட்ட கனமழை: அமராவதியில் கோவில் சுவர் இடிந்து 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Mumbai
மும்பை: மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பெரும்பாலான இடங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமராவதி மாவட்டத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பெரும்பாலான இடங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் மும்பையின் தெருக்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பதால் மும்பையில் ரயில்கள் தாமதமாக வருகின்றன. இதனால் பயணிகள் மணிக்கணக்கில் ரயில் நிலையத்தில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே தண்ணீரில் தத்தளிக்கும் மும்பையில் நேற்று இரவு கன மழை பெய்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கொலாபாவில் 79.2 மிமீ மழையும், சான்டா க்ரூஸில் 148.9 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மாரத்வாடா பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் தண்ணீரில் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்ட தங்கள் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.

கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள கவுன்டின்யாபூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில் சுவர் கடந்த ஞாயிற்றுகிழமை மாலை இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர், மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களின் உடல்கள் நேற்று தான் மீட்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+