மும்பையில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்தது-2 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில், அந்தேரி பகுதியில், கட்டப்பட்டு வந்த மெட்ரோ ரயில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கிட்டத்தட்ட 50 மீ்ட்டர் நீளத்திற்குப் பாலம் இடிந்து விழுந்தது. அந்தேரி-கட்கோபர் பிரிவில் இந்த விபத்து நடந்துள்ளது.
2 தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரமாக மும்பையில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. செம்பூரில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications