விளையாட வந்த சிங்ளவரை திருப்பி அனுப்பியது சரியான முடிவு அல்ல: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைவில் ஐ.நா. சபைக்கு அனுப்பப்படும்.திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதை கொண்டு செல்வார்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது.எனவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கையும். இதற்காக வாதாடி வருகிறோம்.
இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதும்,இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான ஒன்று.எனவே, விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என்றார் அவர்.
பின்னர் கிரானைட் கொள்ளையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி மீதான வழக்கு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications