சென்னை வரும் பிரணாபை வரவேற்க ஸ்ரீரங்கம் பயணத்தை தள்ளிவைத்த ஜெயலலிதா
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை வரவேற்கத் தான் முதல்வர் ஜெயலலிதா தனது ஸ்ரீரங்கம் பயணத்தை தள்ளிவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா தனது தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு செப்டம்பர் 3ம் தேதி செல்வதாக இருந்தது. அவர் அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ஸ்ரீரங்கம் கோவிலின் சீரமைக்கப்பட்ட நந்தவனத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் முதல்வர் தனது பயணத்தை தள்ளி வைத்துள்ளார் என்று கடந்த 30ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அவர் வரும் 7ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் என்று கூறப்படுகிறது..
சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 7ம் தேதி சென்னை வருகிறார். வரும் 8ம் தேதி நடக்கும் உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அவரை வரவேற்கத் தான் முதல்வர் ஸ்ரீரங்கம் பயணத்தை தள்ளி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் நீதிமன்ற விழாவில் கலந்துகொள்ளவரும் ஜனாதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு விருந்து அளிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளாராம்.
இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கை சந்தித்து வரும் முதல்வர் உயர் நீதிமன்ற விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications