பொறியியல் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- மாணவர்கள் புகார்
சென்னை: பொறியியல் கல்லூரிகளின் வளாகங்களில் நேர்முகத் தேர்வு நடத்தி வசூல் வேட்டை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஒரு கன்சல்டன்சி நிறுவனம் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூறியதாவது:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கன்சல்டன்சி நிறுவனத்தினர், தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு சென்று, தாங்கள் நடத்தி வரும் பிரபல கம்பெனிக்கு மாணவர்களை வேலைக்கு எடுப்பதாக கூறி நேர்முகத்தேர்வு நடத்தினர்.
நேர்முகத் தேர்வில் தேர்வான மாணவர்களிடம் நல்ல வேலைக்காக ரூ10 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை வசூலித்தனர். பின்னர் பயிற்சி கொடுக்கிறோம் என்று கூறி சென்னை அண்ணா நகருக்கு வரவழைத்து பயிற்சி கொடுக்காமல் ஏமாற்றினர்.
விசாரித்ததில் இந்த நிறுவனம் யாருக்கும் வேலைகளை வாங்கித் தராமல் ஏமாற்றி பணம் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications