கிரானைட் வழக்கில் சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன் 4வது முறை கைது
கிருஷ்ணகிரி: அனுமதியின்றி கிரானைட் வெட்டி எடுத்து கடத்திய வழக்கில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் இன்று 4வது முறையாக கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் தி.க. பிரமுகரை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் உட்பட பலரை, போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் ராமச்சந்திரன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பிறகு அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தி.க.பிரமுகர் கொலை வழக்கு மட்டுமின்றி, ராமச்சந்திரன் மீது பல புகார்கள் எழுந்தன. இது குறித்து போலீசார் விசாரித்ததில், உத்தனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் கிரானைட் மற்றும் கனிமவளங்களை முறைகேடான முறையில் வெட்டி எடுத்து அவர் கடத்தியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ராமச்சந்திரன் மற்றும் அவரது சகோதரர் வரதராஜன் ஆகியோரை கைது செய்து ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆலம்பாஷா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே சிறையில் உள்ள ராமச்சந்திரன் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதேபோல சந்தனப்பள்ளி, இருதுகோட்டை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி கிரானைட் வெட்டி கடத்தியதாக அவர் மீது கடந்த 20ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ராமச்சந்திரன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ராமச்சந்திரன் மீதான வழக்குகள் தொடர்பாக, அவர் சிறை இருந்த நிலையிலேயே 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications