For Daily Alerts
Just In
சிங்களவர் மீதான தாக்குதல்- கொழும்பில் தமிழ் வியாபாரிகள் போராட்டம்
இலங்கையிலிருந்து கடந்த திங்கட்கிழமை தமிழகத்திலுள்ள பூண்டி மாதா கோவில், வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த 184 இலங்கை பயணிகள், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் இலங்கை பக்தர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 6 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இலங்கை பக்தர்கள் மீது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இலங்கை தலைநகர் கொழும்பில், தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 தமிழ் வியாபாரிகள் கலந்துகொண்டு, இந்தியா வரும் இலங்கை மக்களின் பாதுகாப்பை இந்திய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென முழக்கமிட்டனர்
Comments
English summary
The Tamil business community in Sri Lanka marched through the streets of the Sri Lankan capital Colombo to protest the recent attack on Sri Lankan pilgrims by pro-LTTE Tamil activists in Tamil Nadu.