பாஜகவில் பிரதமராக தகுதியான ஒரே நபர் சுஷ்மா ஸ்வராஜ் மட்டும்தான்: பால்தாக்கரே

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் வெளியாகியிருக்கும் பால்தாக்கரேயின் பேட்டியில் இடம்பெற்றுள்ளதாவது:
நான் பலமுறை கூறிவிட்டேன். பாரதிய ஜனதா கட்சியில் பிரதமராவதற்கு தகுதி வாய்ந்த ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ் மட்டும்தான். அவர் மிகவும் புத்திசாலியான பெண். அவரால் சிறப்பான நிர்வாகத்தை தர முடியும்.
அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசுதான் அமையும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் கருத்து ஏற்புடையது அல்ல. இது தொடர்பாக வேறு எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது. அவர் ஏன் இப்படி சொன்னார்?
பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையேயான உறவு வலுவாக இருக்கிறது என்று இப்போதைய நிலைமையில் சொல்ல முடியாது. கடந்த காலத்தில் வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். இப்போது அப்படி எந்த ஒரு தலைமையும் இல்லை. அதாவது இந்தக் கருத்து என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பற்றியதுதான். பாஜக பற்றியது அல்ல என்று கூறியுள்ளார். பால்தாக்கரே.












Click it and Unblock the Notifications