இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகம் ரூ.3,33,248 கோடி: நிர்வாக இயக்குனர் தகவல்

இது குறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்தியா முழுவதும் 2,289 கிளைகளை கொண்டு்ள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் வங்கியின் 1000வது கிளை திறக்கப்பட்டது. வங்கி வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அங்கு புதிய கிளைகள் திறக்கப்பட்டு வருகின்றன. 2011-2012ல் 447 கிளைகள் துவங்கப்பட்டன. இவற்றில் 77 சதவீத கிளைகள் கிராமங்களிலேயே துவங்கப்பட்டுள்ளன.
வங்கியின் மொத்த வணிகம் ரூ.3,33,248 கோடியை எட்டியுள்ளது. வங்கி வைப்பு தொகை ரூ.1,84,882 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி கடன் ரூ.1,19, 148 கோடியாக அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 24.52 சதவீதம் அதிகமாகும். வங்கிக்கு நடப்பு காலாண்டில் ரூ.233.44 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு லாபத்தை விட 13.55 சதவீதம் அதிகம் ஆகும்.
வங்கியின் மூலம் இந்தியா முழுவதும் 1,200 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,100 ஏடிஎம் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வங்கியின் மூலம் மீனவ பெண்களுக்கு சாகர் லெட்சுமி என்ற திட்டம் துவங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 61 பேருக்கு ரூ.19.61 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 2 மாதங்களில் சுமார் ரூ.100 முதல் ரூ.1500 கோடி வரை புதிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி மண்டலத்திற்கு வழங்கப்பட்ட இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது.












Click it and Unblock the Notifications