கூடங்குளம் தாக்குதலுக்கு கண்டனம்: இடிந்தகரையில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
இடிந்தகரை: கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் போலீசார் நடத்திய கொடுந்தாக்குதலைக் கண்டித்து இடிந்தகரையில் கிராம மக்கள் 48 மணி நேர உண்ணாவிரதப் பொராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவும், போலீசாரின் தாக்குதலை கண்டித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படுவதைக் கண்டித்து வைராவிக் கிணறில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் போலீசார் அவர்களை கண்ணீர்புகைக் குண்டு வீசியும் தடியடி நடத்தியும் விரட்டியடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications