ஜெயலலிதா செப். 13 ம் தேதி ஸ்ரீரங்கம் பயணம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கம் தொகுதி முதல்வர் வெற்றி பெற்ற தொகுதியாகும். இதனையடுத்து அங்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அங்குள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செப்டம்பர் 13 ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
இதன் பின்னர் ஸ்ரீரங்கம் மேலசித்திர வீதி, தெற்கு சித்திரை வீதி சந்திப்பில் காலை 11.45 மணி அளவில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். அந்த விழாவில் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்த விழா நடைபெறுவதை முன்னிட்டு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் திருச்சி மாநகர் மேயர் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்த பயணம் செப்டம்பர் 3 மற்றும் 8 தேதி என இரண்டு முறை முடிவு செய்யப்பட்டு பின்னர் சில காரணங்களினால் செப்டம்பர் 13 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications