கைதான பட்டாசு ஆலை அதிபர் மதுரையில் போலீஸ் அதிகாரி வீட்டில் மறைந்திருந்தாரா?
விருதுநகர்: சிவகாசி அருகே 38 பேரை பலிகொண்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர் முருகேசன் மதுரையில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 38 பேர் பலியாகினர், 56 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி உள்ளிட்ட 12 பேரை கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஆனால் ஆலை உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் முருகேசன் மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மதுரை அருகே சமயநல்லூரில் கருப்பணசாமி கோவிலில் அருகே நின்று கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அவர் மதுரையில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முருகேசன் குளக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து விருதுநகர் டி.எஸ்.பி. ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications