'விவேகானந்த யுவ விகாஸ யாத்திரை' தொடங்கிய மோடி
அகமதாபாத: செப்டம்பர் 11 ம் தேதி என்றாலே அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தாக்குதல்தான் நம் நினைவிற்கு வரும் ஆனால் அதற்கும் முந்தைய வரலாறு ஒன்று இருக்கிறது. அது சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சரித்திரப் புகழ்வாய்ந்த பேருரை. இதனை கருத்தில் கொண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது யாத்திரையை தொடங்கியுள்ளார். இதற்கு ‘விவேகானந்த யுவ விகாஸ யாத்திரை' என்றும் பெயரிட்டுள்ளார்.
விவேகானந்த யுவ விகாஸ யாத்திரை
குஜராத் சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் முதல்வர் நரேந்திர மோடி ஒரு மாத காலத்துக்கு மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். 1893-ல் அமெரிக்காவில் நடைபெற்ற உலக சமயங்களின் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் தனது பிரசித்தி பெற்ற உரை நிகழ்த்தியது செப்டம்பர் 11-ம் தேதி என்பதால், யாத்திரையை இந்தத் தேதியில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இன்றைய தினம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பேச்சராஜி என்ற ஊரில் யாத்திரையைத் தொடங்கும் அவர் குஜராத்தின் முக்கிய பகுதிகளுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். சிகாகோவில் விவேகானந்தர் உரை ஆற்றியதன் நினைவாகவே மோடியின் யாத்திரைக்கு "விவேகானந்த யுவ விகாஸ யாத்திரை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த யாத்திரை குறித்து குறிப்பிட்டுள்ள மோடி, சுவாமி விவேகானந்தர் வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக வேண்டும் என்ற கனவு கண்டார். நான் எனது மாநிலமான குஜராத்தை வலிமையான, வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றவும், அதற்கான இளைஞர்களைத் தேடியும் இந்த யாத்திரையை தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
குட்காவுக்கு தடை
செப்டம்பர் 11 ம் நாள் மாநிலம் முழுவதும் குட்காவை தடை செய்துள்ளேன். இது வளர்ச்சிக்கான மிகச்சிறந்த அடையாளம். குஜராத்தில் உள்ள எந்த பெண்ணும் குட்காவிற்கான தனது கணவனையோ, மகனையோ இழந்ததாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இதனை தடை செய்துள்ளேன். என் மாநில மக்கள் குட்கா சாப்பிட்டு ஆரோக்கிய சீர்கேடு அடைவதை என்னால் பொருத்துக்கொள்ள முடியாது. குஜராத் மாநிலம் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த மாநிலமாக மட்டும் இல்லாது ஆரோக்கியமான மாநிலமாக மாறவேண்டும் என்றும் மோடி தனது ப்ளாக்கில் எழுதியுள்ளார்.
இந்த நாள் சகோதரத்துவத்தை உணர்த்திய நாள். சுவாமி விவேகானந்தரின் உரையை கருத்தில் கொண்டு அவரது கனவான வலிமையான, வளமான இந்தியாவை உருவாக்க முனைவோம் என்றும் இந்த யாத்திரை குறித்து டிவிட்டரிலும் குறிப்பிட்டுள்ளார் மோடி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications